அதிகரித்துள்ள விலையேற்றத்தை கண்டித்து புதுக்குடியிருப்பில் கவனயீர்ப்பு பேரணி
நாட்டில் அதிகரித்துள்ள விலையேற்றத்தை கண்டித்து புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர்களும் பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களும் இணைந்து இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இன்று காலை 9 மணிக்கு புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் இருந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.