ஜப்பானில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்….
ஜப்பானின் தென்மேற்கு மற்றும் மேற்கு பகுதியில் கியூஷூ தீவு பகுதியருகே நேற்று (22) அதிகாலை 1.08 மணியளவில் 6.4 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 40 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள போதும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
ஜப்பானின் மியாஜகி, ஒய்டா, கொச்சி மற்றும் குமமோட்டோ ஆகிய மாகாணங்களில் 5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இவற்றில் ஒய்டா மாகாணத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதுடன், மியாஜகி மாகாணத்தில் 4 பேர் காயமடைந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.