பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளை அரசுடமையாக்க அமைச்சரவை அனுமதி….
பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள சுகாதார நிறுவனங்களை அரசுடமையாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய தோட்டத்துறையில் காணப்படும் 450 சுகாதார நிறுவனங்களில் முதற் கட்டமாக 59 சுகாதார நிறுவனங்களை மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு ஒப்படைப்பதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.