மேல் மாகாண வைத்தியசாலைகளில் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு…
மேல் மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளின் தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல வைத்திய அதிகாரிகள் 7 கோரிக்கைகளை முன்வைத்து, இன்று 24 மணிநேர அடையாள பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.அதன்படி ,இந்த கோரிக்கைகளை முன்நிறுத்தி, இதற்கு முன்னரும் தொழிற்சங்க நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டனர்.இதற்கு தீர்வை வழங்கும் நோக்கில் பதவி உயர்வில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சுகாதார அமைச்சரினால் அமைச்சரவை அனுமதி பெறப்பட்டதாகவும் குறித்த தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.மேலும் ,எவ்வாறாயினும், குறித்த அமைச்சரவை அனுமதியில் காணப்பட்ட பிரச்சினை காரணமாக 13,000 தாதியர்களுக்கான பதவி உயர்வு இல்லாமல் போயுள்ளதாகவும் சுகாதார துறையினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.