நியூசிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு……
கனடாவை தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூசிலாந்திலும் லொறிச் சாரதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கனடாவில் எல்லை கடந்து செல்லும் லொறி சாரதிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்கிற அரசின் உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த நாட்டின் தலைநகர் ஒட்டோவாவில் ‘சுதந்திர அணிவகுப்பு’ என்கிற பெயரில் லொறிகளுடன் சாரதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஒரு வாரத்துக்கும் மேலாக ,இடம்பெற்றுவரும் லொறி சராதிகளின் போராட்டத்தால் ஒட்டோவாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கனடாவில் லொறி சராதிகளின் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் நிலையில், தற்போது இந்த போராட்டம் உலகின் பிற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது.
அந்த வகையில் நியூசிலாந்தில் அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து லொறிச் சாரதிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் வெலிங்டனில் லொறிகள் மற்றும் கார்களில் அணிவகுத்து பாராளுமன்றம் அமைந்துள்ள வீதியை முற்றுகையிட்டுள்ளனர்.