சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை….
பல ஐரோப்பிய தயாரிப்புகள் தனது சந்தைக்குள் நுழைவதைத் தடுக்கும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்குமாறு சிறிலங்காவை ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சிறிலங்கா அரசாங்கம் ஆகியவற்றின் கூட்டு ஆணைக்குழுவின் 24ஆவது கூட்டம் நேற்றைய தினம் பிரஸ்ஸல்ஸில் இடம்பெற்றது.
நட்பு மற்றும் திறந்த சூழ்நிலையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இருதரப்பு உறவுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டதுடன், இருதரப்பு நலன்கள் – ஆளுகை, நல்லிணக்கம், மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்துக்கள் மற்றும் புதுப்பிப்புகள் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக இரு தரப்பும் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.