முதன் முறையாக “தனிமைப்படுத்தலில்;” தளர்வை அறிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு!
முதன் முறையாக “தனிமைப்படுத்தலில்;” தளர்வை அறிவி;த்துள்ள உலக சுகாதார அமைப்பு! கொரோனாவுடன் போராடும் நாடுகள், சில சூழ்நிலைகளில் தனிமைப்படுத்தப்பட்ட நாட்களை குறைக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
கொரோனா தனிமைப்படுத்தல் காலம் தற்போது 14 நாட்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
எனினும் அத்தியாவசிய சேவைகளின் அழுத்தத்தில் உள்ள இடங்களுக்கு இந்த புதிய வழிகாட்டல்கள் உதவியாக இருக்கும் என்று சுகாதார அமைப்பு குறிப்;பிட்டுள்ளது.
இதன்படி சோதனையை மேற்கொள்ளாத ஒருவர் 14 நாட்களாக இருக்கும் தனிமைப்படுத்தல் காலத்தை 10 நாட்களாக குறைக்கலாம்.
உலகளவில் ஓமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால், பல நாடுகளின் தொடர்புத் தடமறியும் திறன் வேகமாக விரிவடைந்து வருவதை அடுத்தே இந்த பரிந்துரையை உலக சுகாதார நிறுவனம் செய்துள்ளது